Content Status

Type

Linked Node

  • DBT Schemes in NTEP

    Learning Objectives

    The learner will be able to 
    - List the DBT Schemes in NTEP
    - Enumerate beneficiaries under each DBT scheme and 
    - State the benefit amount in each scheme

H5Content
Content

NTEP இல் DBT திட்டங்கள்

இத்தொகையானது பொது மற்றும் தனியார் துறை நோயாளிகள் அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

  • பழங்குடியினர் உதவித்திட்டத்தின் கீழ், பழங்குடியினர் காசநோயால்  பாதிக்கப்படும்போது  அனைத்து வகை காசநோயாளிகளுக்கும்   ரூ. 750/-  ஒரு முறை மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
  • முதல்நிலை மருந்துகளுக்கு கட்டுப்படும் வகையிலான காசநோய்க்கு மருந்து எடுக்கும் (DSTB) நோயாளிகளுக்கு , சிகிச்சை ஆதரவாளராக செயல்பட்டவர்களுக்கு ரூ. 1000/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுதப்படுகிறது.
  • மருந்து எதிர்ப்பு திறன் கொண்ட  (DSTB) காசநோயாளிகளுக்கு சிகிச்சை ஆதரவாளராக செயல்பட்டவர்களுக்கு ரூ. 5000/- இரண்டு தவணைகளில் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

காசநோயைக் கண்டறிந்து அரசுக்கு அறிவிக்கும் கீழ்கண்ட தனியார் அமைப்புகளுக்கு ரூ. 500/- அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

o   தனியார் மருத்துவர்கள்                  * தனியார் கிளினிக்குகள்

o   தனியார் மருத்துவமனைகள்        * நர்சிங் ஹோம்கள்

o   தனியார் ஆய்வகங்கள்                    * தனியார் மருந்தகங்கள்

  • மேலும், மேற்கண்ட தனியார் அமைப்புகள் தாங்கள் கண்டறிந்து அரசுக்கு அறிவித்த காசநோயாளிகளின் சிகிச்சைக்கு இறுதி வரை உறுதுணையாக இருந்து , அவர்களை பூரணகுணமடைய செய்து அரசுக்கு தெரிவித்தாலோ அல்லது அவர்களை சிகிச்சையை முழுமையாக எடுக்க செய்து அரசுக்கு தெரிவித்தாலோ ரூ. 500/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
  • தங்கள் வீட்டிற்கு அருகாமையில் காசநோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து சுகாதாரநிலையங்களுக்குத் தெரிவிக்கும் சாதாரண குடிமகன்களுக்கு ரூ. 500/- அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
  • மேற்கண்ட பயனாளிகளின் வங்கி விவரங்களை சேகரிக்கும் காசநோய் சுகாதாரப் பணியாளர், அவ்விவரங்களை நி-க்ஷ்யில் உள்ளீடு செய்து அதனை சரிபார்க்க PFMS க்கு அனுப்பி வைக்கிறார்.
  • இத்தகைய சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு பயனாளியின் வங்கிக் கணக்கு விவரங்கள் செல்லுபடியாகும் என்று PFMS  ’வெற்றிகரமான சரிபார்ப்பு” என்று அறிவிக்கும்.
  • அனைத்து வகையான காசநோயாளிகளுக்கும் (DSTB & DRTB) ஊட்டச்சத்து நிதியுதவி திட்ட “நி-க்ஷ்ய் போஷன் யோஜனா” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து அவர்கள் வழங்கிய அலைபேசி எண்ணிற்கு குறிஞ்செய்தி அவ்வப்போது அனுப்பப்படும்.

கட்டாய குறுஞ்செய்தி மற்றும் நிபந்தனை குறுஞ்செய்தி

  • ஒவ்வொரு அறிவிக்கப்பட்ட காசநோயாளிகளின் அலைபேசி எண்ணிற்கு ஊட்டச்சத்து உதவித் தொகை வழங்குவது குறித்து நிபந்தனைக்குட்பட்ட நினைவூட்டல் இரண்டுமுறை குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
  • முதல் நிபந்தனை நினைவூட்டல் குறுஞ்செய்தி, நோய் கண்டறிந்து அறிவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனுப்பப்படும்.
  • தவறான வங்கி விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தால், நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை பரிவர்த்தனை நிராகரிக்கப்படலாம்.


 

Content Creator

Reviewer